தனது பாதுகாப்பு உத்தியோகத்தரை மணமுடித்து மகாராணியாக்கினார் தாய்லாந்து மன்னர்

தாய்லாந்து மன்னர் வஜிரலோர்ங்கோன் தனது மெய்பாதுகாப்பாளரான பெண்மணியை திருமணம் செய்துள்ளதுடன் அவரிற்கு மகாராணி பட்டத்தை வழங்கியுள்ளார்.

மன்னர் வஜிரலோர்ங்கோன் அவரது மனைவி சுதிடாவை மகாராணி சுதிடாவாக பதவி உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளார்,அவரிற்கு அரசபரம்பரை பட்டம் வழங்கப்படுவதுடன் அவர் அரச பரம்பரையை சேர்ந்த ஒருவராக கருதப்படுவார் என அரண்மனையிலிருந்து வெளியான அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

மகாராணி சுதிடா மன்னருடன் நீண்டகாலமாக நெருக்கமான உறவை கொண்டிருந்தவர் என்பதுடன் மன்னருடன் பொதுமக்கள் முன்னிலையில் பல தடவை தோன்றியிருந்தார்.

எனினும் இருவருக்கும் இடையிலான உறவு குறித்து உத்தியோகபூர்வமாக அரண்மனை அறிவிக்காத நிலை காணப்பட்டது.

2014 இல் முன்னாள் விமானப்படை அதிகாரியான சுதிடா டிட்ஜாயை தனது மெய்பாதுகாவலர் பிரிவின் துணை தளபதியாக மன்னர் நியமித்திருந்தார்.

மன்னர் மூன்று தடவை திருமணம் செய்து விவகாரத்து செய்தவர் என்பதும் அவரிற்கு ஏழு குழந்தைகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை திருமணநிகழ்வுகள் தொடர்பான காட்சிகளை தாய்லாந்து தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!