ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற்றம்!!

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காலத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்காவின் தற்போதைய அரச தலைவர் டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தம் சிதைவடைந்த மற்றும் அழிந்து கொண்டிருக்கும் ஒன்றென விமர்சித்துள்ள ட்ரம்ப், அமெரிக்க பிரஜையென்ற அடிப்படையில் தமக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்தி நடவடிக்கைகளுக்கு எதிரான தடைகளை நீக்குவதற்கு மாற்றீடாக அணுசக்தி நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவது தொடர்பான மேற்குலக நாடுகளுடனான ஒப்பந்த்தில் ஈரான் கடந்த 2015 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டது.

இந்தநிலையில் குறித்த பொருளாதார தடைகள் மீள விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் யுரேனியம் செறியூட்டல் நடவடிக்கைகளை எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி முன்னெடுக்கவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் அர்ப்பணிப்புக்களுக்கு மதிப்பளிப்பதில்லையென அமெரிக்கா அறிவித்துள்ளதாக ஈரான் அதிபர் ஹசன் ரஹானி தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கைச்சாத்திட்டன.
எதிர்வரும் 12ஆம் திகதி குறித்த அணுசக்தி ஒப்பந்தம் மீள புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!