ஐ.எஸ். இன் பெயரை பாராளுமன்றத்தில் உச்சரிக்காமைக்கான காரணத்தை வெளியிட்ட ஜனாதிபதி

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களின் பெயரை உச்­ச­ரிக்­காது உரை­யாற்­றி­யி­ருந்தார்.

நேற்று கூடிய பாரா­ளு­மன்­றத்தில், கடந்த 21ஆம் திகதி பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து சுற்­று­லாத்­து­றையில் ஏற்­பட்­டுள்ள பாதிப்­புகள் குறித்த சபை ஒத்­தி­வைப்­பு­ வேளை விவாதம் இடம்­பெற்­றது. இந்நிலையில் உரை­யாற்றிய ஜனாதிபதி குறித்த பயங்கரவாத அமைப்பின் பெயரை குறிப்பிடவில்லை.

அதற்கான காரணத்தை அவர் குறிப்பிடுகையில், சர்­வ­தேச பயங்­க­ர­வாதம் குறித்து நான் படித்து தெரிந்த கார­ணிகள் உள்­ளன. கடந்த 10 நாட்­களில் இவற்றை நான் படித்து அறிந்­து­கொண்டேன். இந்த நான்கு எழுத்து பயங்­க­ர­வா­தத்தை நாம் பாவிப்­பது அவர்­களை நாம் அங்­கீ­க­ரி­ப்­பதை போன்று ஆகி­விடும். சர்­வ­தேச தலை­வர்கள் எவரும் இதனை அங்­கீ­க­ரிக்­க­வில்லை. நானும் அத­னையே கையாள்­கின்றேன் என்றார்.

மேலும், அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி பராக் ­ஒ­பாமா இந்த விடயம் தொடர்பில் குறிப்­பிட்­டி­ருந்தார். இவர்­க­ளது பெயரை குறிப்­பி­டு­வது அவர்­களை அங்­கீ­க­ரிப்­ப­தாக அமையும். இரண்டு எழுத்­துக்­க­ளையோ நான்கு எழுத்­துக்­க­ளையோ நான் பயன்படுத்தப்போவதில்லை. அவ்வாறு பயன்படுத்தினால் இந்தப் பயங்கரவாதிகளை நாம் அங்கீகரித்ததாகிவிடும். எனவேதான், இன்­றைய பேச்சில் அவர்­க­ளது பெயரை நான் உச்­ச­ரிக்­க­வில்லை என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!