கிழக்கில் குண்டுகள் வெடித்த இடங்களில் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்புக்கு நேற்று பயணம் மேற்கொண்டு, குண்டுவெடிப்பு நிகழ்ந்த சீயோன் தேவாலயத்தைப் பார்வையிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்த ஜனாதிபதி அவர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

அத்துடன், கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி குண்டு வெடிப்பு இடம்பெற்ற கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்திற்கும் ஜனாதிபதி சென்று, அரச அதிகாரிகள், பிரமுகர்களைச் சந்தித்துப் பேசினார். சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!