10 கொள்கலன்களில் வாள்கள் இறக்குமதி – நாடாளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்

சிறிலங்காவில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், 10 கொள்கலன்களில் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், 10 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாள்கள் சிறிலங்கா முழுவதும் புழக்கத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பள்ளிவாசல்களில் வாள்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் வாள்களை பதுக்கி வைத்துள்ளனர் என்ற தவறான கருத்து சமூகத்தில் பரவியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!