கொச்சிக்கடை குண்டுதாரியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய அலாவுதீன் அகமட் முவாத்தின் மனைவி, முதலாவது குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைகளின் போதே, இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்து இரண்டு வாரங்களில் – 22 வயதுடையவரான தற்கொலைக் குண்டுதாரியின், மனைவிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.

குண்டுதாரியான முவாத்தின் தந்தையான 59 வயதுடைய அகமட் லெப்பை அலாவுதீன், நீதிமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்டார்.

தனது மகன் 14 மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்திருந்தார் என்றும், மே 5ஆம் நாள் அவரது மனைவிக்கு முல் குழந்தை பிறந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!