சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்

சமூக ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா தொலைத்தொடர்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் பல இடங்களில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து கடந்த 13ஆம் நாள் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

முகநூல், வட்ஸ் அப், வைபர் யூ ரியூப், இன்ராகிராம், கீச்சகம் போன்ற சமூக ஊடகங்கள் மீது இந்த தடை விதிக்கப்பட்டது.

நேற்று மாலையில் இருந்து இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்காவில் இந்த சமூக ஊடகங்கள் வழமை போல செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!