ஒரே கல்லில் அரசாங்கம் நூறு பறவைகளை கொலை செய்துள்ளது- மகிந்த

??????????????????????????????????????????????????????????
அரசாங்கம் ஒரே கல்லில் நூறு பறவைகளை கொன்றுவிட்டது என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் அமைச்சர்கள் இராஜினாமா காரணமாக மக்களின் கவனம் பல விடயங்களில் இருந்து திசை திரும்பியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் பல விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி மோசடி மறக்கப்பட்டுள்ளது,கடன் நெருக்கடி மறக்கப்பட்டுள்ளது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த சிலர் இன்னமும் மருத்துவமனையில் உள்ளனர் அவர்களும் மறக்கப்பட்டுவிட்டனர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் குறித்து தற்போது எவரும் பேசுவதில்லை,தேடுதல் நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டன என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் ஆயுதங்களை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் முடிவடைந்துவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர்கள் தொடர்பில் எடுக்கப்பவுள்ள நடவடிக்கைகள் குறித்து எவரும் பேசுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒரே கல்லில் நூற்றுக்கணக்கான பறவைகளை கொலைசெய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நோக்கங்களிற்காக முஸ்லீம் சமூகத்தை ஐக்கியதேசிய கட்சி சிறந்த முறையில் பயன்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் சமூகத்தில் உள்ள மிதவாதிகளினதும் தீவிரவாத போக்குடையவர்களினதும் வாக்குகள் ஐக்கியதேசிய கட்சிக்கு அவசியம் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தனக்கான வாக்கு எங்கிருந்து கிடைக்கின்றது என சிந்திப்பதில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் அதேவேளை தாங்கள் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்தக்கூடிய அரசாங்கத்தையே முஸ்லீம் தலைவர்கள் விரும்புகின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!