வின்னிபெக்கில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள் – அச்சத்தில் பொதுமக்கள்!

வின்னிபெக்கில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 22 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வின்னிபெக் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது இரண்டு மடங்கு அதிகரிப்பு என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வின்னிபெக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு 22 கொலைச் சம்பவங்கள் பதிவாகியிருந்ததாகவும், எனினும் அது தற்போது அதிகரித்துள்ளமை காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக மக்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!