போலீசாருக்கு நாளை முதல் வாரவிடுமுறை அளிக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு!

ஆந்திர மாநில போலீசாருக்கு நாளை முதல் வார விடுமுறை அளிக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், காவலர் முதல் ஆய்வாளர் வரை ஷிப்ட் முறையில் வார விடுமுறை எடுக்கலாம் என்றும் சில மாவட்டங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை பெற்ற பின்பு மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறினார்.

மேலும் காவல்துறை காலிப்பணி இடங்களில் தேவைப்படும் பட்சத்தில் கட்டாய ஓய்வில் சென்றவர்கள் மற்றும் சஸ்பெண்ட்டில் உள்ளவர்களையும் பணியில் அமர்த்திக் கொள்ளலாம் என முடிவு எடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!