கோத்­த­பாய வேட்­பாளர் என்­ப­தனை ஆகஸ்ட் 7 இல் மஹிந்த அறி­விப்பார் – கெஹெ­லிய ரம்­புக்­வெல

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ என்­ப­தனை மஹிந்த ராஜ­பக் ஷ ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பார் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

அதற்கு முன்னர் நாடு முழு­வதும் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் நாடு முழு­வதும் மக்கள் மத்­தியில் தெ ளிவு­ப­டுத்தும் கூட்­டங்கள் நடத்­தப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் ஆற்­றிய உரையின் ஊடாக சில விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுக்கு தயா­ரா­கி­யுள்­ளமை தெ ளிவா­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கூற்று என்­பன குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார்.

கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல இது குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் கௌர­வ­மான தீர்­மானம் ஒன்றை எடுப்பேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­ததன் மூலம் அவர் சில விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுக்கு தயா­ரா­கி­யுள்ளார் என்­பது தெரி­கின்­றது.

அத்­துடன் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லா­னது இரு­முனை போட்­டிக்­க­ள­மா­கவே அமையும் என்ற விட­யத்­தையும் ஜனா­தி­ப­தியின் உரை வெ ளிப்­ப­டுத்­து­கின்­றது.

எப்­ப­டி­யி­ருப்­பினும் எமது ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ என்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம். இதனை சுதந்­திரக் கட்­சியும் ஏற்­றுக்­கொள்ளும் என்­பதே எமது எண்­ண­மாகும். சுதந்­திரக் கட்­சியில் இருக்­கின்ற சிலர் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்­து­கொள்ளும் சாத்­தி­யமும் உள்­ளது. ஆனால் அதி­க­மானோர் எமது பக்கம் வந்­து­வி­டு­வார்கள்.

மேலும் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ என்­ப­தனை மஹிந்த ராஜ­பக்ஷ ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பார் என்று எதிர்­பார்க்­கின்றோம்.

பொது­ஜன பெர­மு­னவின் சம்­மே­ளனம் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி நடை­பெறும். இந்த சம்­மே­ளனக் கூட்­டத்தில் மஹிந்த ராஜ­பக்ஷ இந்த அறி­விப்பை வெ ளியி­டுவார் என்று எதிர்­பார்க்­கின்றோம்.

அதற்கு முன்னர் நாங்கள் நாட­ளா­விய ரீதியில் எமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்த பிரசார செயற்பாடுகளை நடத்துவோம். அவ்வாறு நாடு முழுவதும் மக்களின் கருத்துக்களை பெற்ற பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார். அவர் .கோத்தபாய ராஜபக்ஷவாகவே இருப்பார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!