சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அரசியல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன இது சம்பந்தமாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சு நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டதன் காரணமாக ஏற்பட்ட தோல்வியை அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டி யுள்ளார்.
தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாயின் இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் யோசனை முன்வைத்துள்ளார்.எது எப்படியிருந்தபோதிலும் அரச தலைவரும், தலைமை அமைச்சரும் இது சம்பந்தமான சரியான பதில் எதனையும் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அமைச்சர் ராஜித கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் அகில விராஜ், ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!