தனியாகப் பயணித்தால் வேகமாகச் செல்லலாம்!- என்கிறார் ரணில்

வாகனமொன்றில் ஒருவரை அழைத்துச் செல்லும் போது, வேகமாகச் செல்ல ​வேண்டாம். அங்கே திருப்பு, இங்கே திருப்பாதே என்பார்கள். ஆனால் தனியாக பயணித்தால், எம்மால் வேகமாகப் பயணிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் ​போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிராமங்கள், பிரதேசங்களின் அபிவிருத்தி என்ன என்பதை தற்போதைய அரசாங்கத்திடமிருந்து தெரிந்துக்கொள்ள முடியும். துட்டகைமுனு மன்னனின் காலத்தைப் போல் அல்ல. இப்போது தான் அபிவிருத்தி என்றால் என்னவென்பதை பலரும் காண்கின்றனர். நாம் எல்லா இடங்களிலும் அபிவிருத்தியை முன்னெடுக்கின்றோம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!