5 இலட்சம் ரூபா கொடுக்காததால் கட்சியை விட்டு நீக்கினார் ஆனந்த சங்கரி! – கல்முனை பிரதி மேயர்

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தமிழின துரோகி என்றும், 5 இலட்சம் ரூபாவைக் கொடுக்காததாலேயே தம்மை அவர் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்கள் எனவும், கல்முனை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று தனது காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கல்முனை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் மற்றும் சுமித்ரா ஜெகதீசன் ஆகியோர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சங்கையா மற்றும் கட்சி உறுப்பினர் வெள்ளிமலை சில மாதங்களுக்கு முன்னர் என்னையும்,சுமித்ரா ஜெகதீசனையும் அழைத்து ஐந்து இலட்சம் ரூபாய் பணம் தருமாறு கூறினார். இதற்கு தாம் மறுப்பு தெரிவித்தமையினாலே தன்னை பதவியிலிருந்து ஆனந்த சங்கரி நீக்கியதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!