பிரபாகரனுக்கு எதிராக போராட தேரர்களின் உதவியை நாடவில்லை!- என்கிறார் ஹரீஸ்

பிரபாகரனின் ஆதிக்கத்தின்போது தேரர்களின் உதவியை நாடி நாங்கள் தமிழ் மக்களை பழிவாங்கவில்லை. அப்போதைய காலகட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் பலம் கொண்டவராக இருந்த காலத்திலும் நாங்கள் தமிழர்களை தட்டிக் கழிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு பல நகரங்கள் இருந்தாலும் முஸ்லிங்களுக்கு உள்ள ஒரே நகரம் கல்முனை மட்டுமே. இந்த நகரில் நாங்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் இதனை தக்கவைக்க பல வருடங்களாக சிரமத்துடன் போராடுகிறேன் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!