மரண தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு

மரண தண்டனை விதிப்பிற்கு எதிராக ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.

மரண தண்டனை அமுலாக்கத்திற்கு எதிராக பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இது குறித்த விசாரணைகள் இன்று இடம்பெற்ற வேளையிலேயே உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை விதித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!