5 ஆண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வு! – அறிவித்தார் மங்கள

அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் தான் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்க்கை நிறைவு தொடர்பாக மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் எனது இறுதித் தேர்தலாக இருக்கும். தற்போது எனக்கு 63 வயதாகின்றது. இன்னும் 5 வருடங்கள் சேவை செய்தாலே போதும். நாம் அனைவரும் ஒய்வு பெற வேண்டிய நேரத்தை அறிந்திருக்க வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!