தப்பியது ரணில் அரசு!- 27 வாக்குகளால் பிரேரணை தோல்வி!

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஜேவிபியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, அதற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகின.

ஐதேக அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியது. பிரேரணைக்கு எதிராக, ஜேவிபியுடன், கூட்டு எதிரணியினரும் வாக்களித்திருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!