வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முன்னோக்கி நகர்வோம்’ செயல் திட்டத்துக்கு முதலாவது முறைப்பாட்டை வடக்கு மாகாண ஆளுநர் குரே வழங்கியுள்ளார். ஈ.பி.டி.பியால் அபகரிக்கப்பட்ட காணி விவகாரத்தையே அவர் தனது முறைப்பாடாக வழங்கியுள்ளார்.
‘யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் தனியாருக்குச் சொந்தமான காணியை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, காணி உரிமையாளரின் அனுமதியையோ அல்லது எந்தவிதமான கொடுப்பனவோ இன்றி அத்துமீறி அபகரித்துள்ளார். சிறிதர் தியேட்டருக்கு வருபவர்களின் வாகனத் தரிப்பிடமாக அந்தக் காணியைப் பயன்படுத்துகிறார். அதனை மீட்டுத் தாருங்கள்’ என்று ஆளுநரிடம் காணி உரிமையாளரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
அந்த முறைப்பாட்டையே ஆளுநர், முன்னோக்கி நகர்வோம் அமைப்பிடம் கையளித்துள்ளார். ஈ.பி.டி.பியைப் பிரதிநித்துவப்படுத்தி வடக்கு மாகாண சபையில் எதிர்கட்சித் தலைவராக உள்ள சி.தவராசாவிடம், அவரது கட்சியின் செயலருக்கு எதிரான முறைப்பாட்டை ஆளுநர் முதலாவதாக கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!