டக்ளசையும் தவராசாவையும் ‘கோர்த்து’ விட்ட ஆளுனர்!

வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வினால் ஆரம்­பிக்­கப்­பட்டுள்ள ‘முன்­னோக்கி நகர்­வோம்’ செயல் திட்­டத்­துக்கு முத­லா­வது முறைப்­பாட்டை வடக்கு மாகாண ஆளு­நர் குரே வழங்­கி­யுள்­ளார். ஈ.பி.டி.பியால் அப­க­ரிக்­கப்­பட்ட காணி விவ­கா­ரத்­தையே அவர் தனது முறைப்­பா­டாக வழங்­கி­யுள்­ளார்.

‘யாழ்ப்­பா­ணம் ஸ்ரான்லி வீதி­யில் தனி­யா­ருக்­குச் சொந்­த­மான காணியை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, காணி உரி­மை­யா­ள­ரின் அனு­ம­தி­யையோ அல்­லது எந்­த­வி­த­மான கொடுப்­ப­னவோ இன்றி அத்­து­மீறி அப­க­ரித்­துள்­ளார். சிறி­தர் தியேட்­ட­ருக்கு வரு­ப­வர்­க­ளின் வாக­னத் தரிப்­பி­ட­மாக அந்­தக் காணி­யைப் பயன்­ப­டுத்து­கி­றார். அதனை மீட்­டுத் தாருங்­கள்’ என்று ஆளு­ந­ரி­டம் காணி உரி­மை­யா­ள­ரால் முறைப்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டது.

அந்த முறைப்­பாட்­டையே ஆளு­நர், முன்­னோக்கி நகர்­வோம் அமைப்­பி­டம் கைய­ளித்­துள்­ளார். ஈ.பி.டி.பியைப் பிர­தி­நித்­து­வப்­ப­டுத்தி வடக்கு மாகாண சபை­யில் எதிர்­கட்­சித் தலை­வ­ராக உள்ள சி.தவ­ரா­சா­வி­டம், அவ­ரது கட்­சி­யின் செய­ல­ருக்கு எதி­ரான முறைப்­பாட்டை ஆளு­நர் முத­லா­வ­தாக கைய­ளித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!