செப்ரெம்பர் முதல் பலாலி-சென்னை விமானசேவை!

பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தின் விமானத்தின் ஓடுபாதை 70 பயணிகளை கொண்ட விமானங்களை கையாளக் கூடியதாக இருக்கும். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாவது விமான சேவை பலாலி விமான நிலையத்திலிருந்து ஆரம்பமாகும். சென்னை -பலாலி இடையிலான விமான சேவைகள் திட்டமிட்ட வகையில் இடம்பெறும்.

விமான நிலையத்தின் ஓடு பாதை அபிவிருத்திக்காக இரண்டு பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. தற்காலிக விமான கட்டுபாட்டு கோபுரம் மற்றும் திருப்பு முனை அமைக்கப்படவுள்ளன. ஏ – 320 ரக விமானங்கள் தரையிறங்கக் கூடியதாக 3800 மீற்றர் நீளமான ஓடு பாதை அமைக்கப்படவுள்ளது.

இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை தெல்லிப்பளையில் இருந்து பலாலி விமான நிலையம் வரையிலான வீதியை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!