கட்டாயத் திருமணத்திற்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் துபாய் இளவரசி ஹயா!

கட்டாயத் திருமணத்திற்கு எதிராக துபாய் இளவரசி ஹயா இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித்துக்கும், அவரின் 6வது மனைவியான ஹயா பின்ட் அல் ஹூசைனுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த மே மாதம் ஹயா தலைமறைவானார். இந்நிலையில் தனக்கு கட்டாயத் திருமணம் நடத்தப்பட்டதாகக் கூறியும், பாதுகாப்பு கேட்டும் லண்டன் நீதிமன்றத்தில் ஹயா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான பகுதியளவு செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு நீதிபதி அனுமதியளித்தார். அப்போது தனது குழந்தைகளை துபாய்க்கே திருப்பி அனுப்புமாறு ஷேக் முகமது சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!