போரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும்- சிறிலங்கா பிரதமர்

போரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று கண்காட்சி ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையர்களுக்கு இன்று முக்கியமான ஒரு நாள். போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, அமைதியைக் கொண்டு வந்த நாள் இன்று நினைவு கூரப்படுகிறது.

பாதுகாப்புப் படையினரை இன்று நினைவு கூரும் அதேவேளை, ஆயுதப் போரில் உயிரிழந்த பொதுமக்களையும் நாம் நினைவு கூர வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!