ஐ.நாவில் முக்கிய அறிக்கை!

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி க்ரீப் தனது இலங்கைப் பயணம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பரில் சமர்ப்பிக்கவுள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி க்ரீப் தமது அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 9முதல் 27 வரை நடைபெறவுள்ளது. இதன்போது செப்டெம்பர் 11ஆம் திகதி இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!