பளையில் துப்பாக்கி, வெடிபொருட்கள் மீட்பு!

பளை – கரந்தாய் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏகே 47 வகை துப்பாக்கி ஒன்றும், அதற்கான மகசின்கள் இரண்டும், அதற்கான ரவைகள் 120 உம், கைக்குண்டுகள் 11 உம் மற்றும் பி,ஈ 10 என வெடிபொருட்கள் 10 கிலோவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தொலைநோக்கி உட்பட பல்வேறு பொருட்களும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டின்கீழ் யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!