சஜித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தையும், கட்சியின் கொள்கையையும் மீறியே செயற்பட்டு வருகின்றார். கட்சியின் கொள்கையை மீறி செயற்படும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதேபோல் இன்று சஜித் பிரேமாதாசவுடன் ஒரு அணி உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்களை தவிர பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிரதமருடன் இணைந்து கட்சிக்காக செயற்பட தயாராக உள்ளனர். ஆகவே கட்சிக்குள் இருந்து குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதே நல்லதென நான் நினைக்கிறேன். அவர்கள் வெளியேறினால் எம்மால் கட்சியை பலப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!