ஜனாதிபதியை நம்பும் சுமந்திரன்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடு எஞ்சியிருக்கும் காலத்தில் முழுதாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ். மாநகரசபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “ மைத்திரிபால சிறிசேன தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றே ஜனாதிபதியாக தெரிவானார். அவர் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, எங்களிடம் ஒரு இணக்கப்பாடு உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவரிடம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ஆம் அவை எழுத்துமூலம் இல்லை என்றாலும் என் மனதில் உள்ளதென தெரிவித்தார். அதற்கமைய அவருடன் 4 வருடங்கள் பயணித்தோம். முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் இன்றும் சிறிது காலங்கள் இருக்கின்றன. அந்த காலத்துக்குள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களென்ற நம்பிக்கை உள்ளது” என மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!