போரில் இறந்த அனைவரும் நினைவுகூரப்பட வேண்டும்- சந்திரசிறி கஜதீர

போரில் இறந்தவர்கள் எந்தத் தரப்பினராக இருந்தாலும் அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

பொரளையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

”போரில் இரண்டு பக்கங்களிலும் மக்கள் இறந்தனர். போரில் இறந்தவர்கள் சிறிலங்காவில் எந்த இடத்தில் வாழ்ந்தவர்களாக இருந்தாலும், அதைப்பற்றி கருத்தில் கொள்ளாமல், அனைவரும் நினைவு கூரப்பட வேண்டும்.

வடக்கிலோ தெற்கிலோ, போரில் இறந்தவர்களை நினைவு கூருவதில் தவறு இல்லை.

எனினும், நாட்டைப் பிளவுபடுத்த முயன்ற தீவிரவாதிகளை நினைவு கூரப்படுவதை எதிர்க்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!