பிலிப்பைன்ஸ் நாட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர். அந்நாட்டின் டிபோலி நகருக்கு அருகில் உள்ள மலை கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் , டிபோலிக்கு அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்ற நீச்சல் விழாவில் பங்கேற்க சென்றனர். விழா முடிந்த பின்னர் அவர்கள் ஒரு லாரியில் ஊருக்கு புறப்பட்டனர். டிபோலி அருகே உள்ள மலைப்பாதையில் சென்ற போது, திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

இதில் அந்த இடத்திலேயே 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்து கிடந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சாலைகள் சரியாக பராமரிக்கப்படாததால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!