திலீபனின் கோரிக்கைகளுடன் யாழ். நோக்கி நடைபயணம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து – வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியால் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

எதிர்வரும் 21.09.2019 சனிக்கிழமை காலை 8 மணிக்கு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகும் நடை பயணமானது, தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பயணத்துடன் யாழ்பாணத்தை சென்றடையும். அனைவரும் கலந்து கொண்டு இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற தியாகி திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்குமாறு நிகழ்வு ஏற்பாட்டு குழுவினர் கோரியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!