பெண்ணை தாக்கிய வினோத நோய்..! வியப்பில் மருத்துவர்கள்.

ஆர்மீனியா நாட்டில் அழுதால் கண்ணில் நீருக்கு பதில் கிறிஸ்டல் கற்கள் வரும் பெண்ணுக்கு என்ன நோய் என புரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 22 வயதான சாடெனிக் கஸர்யான் எனும் இளம் பெண்ணுக்கு சமீபத்தில் கண் வலி ஏற்பட்டது. அவரது கண்ணைப் பார்த்த உறவினர்கள், பணியின் போது கண்ணாடித் துண்டு ஏதோ சிக்கியிருப்பதாகக் கூறி அகற்றினர். இருப்பினும் வலி தொடர்ந்ததால், கண் மருத்துவரை அணுகிய போது மருந்து அளித்ததால் சில கிறிஸ்டல் கற்கள் அகற்றப்பட்டன. அதன் பின்பும் கண்களில் உறுத்தல் இருந்தது. கண்களில் கிறிஸ்டல் கற்கள் வருவது அதிகரித்துக் கொண்டே சென்றது. நாளொன்றுக்கு 50 கற்கள் வரை வந்ததையடுத்து, வலி பொறுக்காமல் பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியபோதும் மருத்துவர்களால் நோயைக் கண்டறியமுடியவில்லை.

ஏழை என்பதால் வெளிநாடும் சென்று சிகிச்சை பெற முடியாமல் தவித்த அப்பெண்ணுக்கு உதவுவதாக ஆர்மீனிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புரோட்டீன் அல்லது உப்புச் சத்து அதிகமானால் அது கண்ணீரின் வடிவத்தை திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாற்றக் கூடும் என்றும், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புக்களிலும் இது போன்று ஏற்பட்டிருக்கும் என்பதால், நோய்க்கான காரணத்தை கண்டறிந்து விரைந்து குணப்படுத்துதல் அவசியம் என்றும் ரஷ்ய கண் மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!