அமெரிக்க உயர்மட்டக் குழு மகிந்தவுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவொன்று, நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த, தேசிய ஜனநாயக நிறுவகம் மற்றும் அனைத்துலக குடியரசு நிறுவகம் ஆகியவற்றின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவே மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளது.

இந்தக் குழுவுக்கு, தூதுவர் கார்ல் இன்டர்பேர்த் தலைமை தாங்கினார்.

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தேர்தலுக்கான சூழலை அவதானிப்பதே, இந்தக் குழுவின் பயண நோக்கம் என்று எதிர்க்கட்சித் தலைவரின் செயலகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!