33 வேட்பாளர்கள் கட்டுப்பணம்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாச, சமல் ராஜபக்ஷ உட்பட 12 பேர் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு சஜித் பிரேமதாச, சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக சமல் ராஜபக், குமார வெல்கம, மற்றும் மஹேஷ் சேனநாயக்க, துமிந்த நாகமுவ ஆகியோரும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று மாலை வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக பணிப்பாளர் சமன் ரட்நாயக்க குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!