சாப்பாட்டில் முடி இருந்ததால் மனைவிக்கு மொட்டையடித்த கணவன்!

வங்காளதேச தலைநகர் டாக்கா. இதற்கு உட்பட்ட ஜோய்பூரட் என்னும் மாகாணத்தில் பப்ளு மொண்டல் என்ற 35 வயது ஆண் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் வயது 23 ஆகும். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவருடைய மனைவி அவருக்கு இரவு சாப்பாடும், பாலும் கொடுத்துள்ளார். அந்த இரண்டிலும் தலைமுடி இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பப்ளு மொண்டல் தன்னுடைய மனைவிக்கு மொட்டை அடித்துள்ளார். கோபத்தில் பிளேடால் அவருடைய தலைமுடியை சரைத்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் அவருடைய மனைவி அலறி உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பப்ளு மீது குற்றம் இருப்பதை உணர்ந்த போலீசார் அவரை கைது செய்தனர். அதிகபட்சமாக 14 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவமானது வங்காளதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!