மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகமே 5 கட்சிகளின் கூட்டு : டக்ளஸ்

இருப்பதை பாதுகாத்துக்கொண்டு பெறவேண்டியவற்றை நோக்கி முன்னேறிச் செல்லவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதையே நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்தும் வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஐந்து கட்சிகளின் கூட்டு என்பது மக்களை ஊசுப்பேற்றி மறுபடியும் ஏமாற்றுவதற்கான ஒரு கட்டமைப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கிடைத்ததை எல்லாம் கைநழுவச் செய்துவிட்டு தற்போது மறுபடியும் கூட்டமைத்து தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதாக கூறி மக்களிடம் வாக்குக் கேட்க முற்படுகின்றனர் ஆனாலும் இவர்களது கதைகளை நம்ப எமது மக்கள் தயாராக இல்லை என்று நம்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தற்போதைய ஆட்சியை உருவாக்குவதற்காக எவ்வளவோஉசுப்பேத்தல்களை மக்களிடத்தில் கூறி வாக்குகளை பெற்றார்கள். ஆனால் இன்று அவர்களது வாக்குறுதிகளிலிருந்து தப்பதித்துக்கொள்ள மற்றுமொரு கூட்டை உருவாக்க முயற்சிக்கின்றனர். இவர்களது சுயநலன்களாலும் ஆளுடைமயற்ற போக்கினாலும் சிறிய தேவைகளுக்கு கூட மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது.

வடக்கை நோக்கி யுத்தம் முன்னெடுக்கப்பட்ட போது மக்கள் பேரழிவைசந்திக்கப் போகின்றார்கள் அதை தடுக்க வாருங்கள் அன்றைய ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்வோம்.

நானும்அதில் கலந்து கொள்கின்றேன் என கூட்டமைப்பினரிடம்கோரியிருந்தேன். சம்மதம் தெரிவித்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வரவில்லை. ஏனெனில் அவர்கள் யுத்தம் நடப்பதை விரும்பியிருந்ததுடன் மக்களது அழிவையும் விரும்பியிருந்தனர் என எண்ணத் தோன்றுகின்றது.

நாம் முன்வைத்துள்ள அரசியல் உரிமை, அன்றாட பிரச்சினை, அபிவிருத்தி ஆகிய மூன்று விடயஙளுக்குள்ளே தமிழ் மக்கள்எதிர்கொள்ளும் சகல விதமான பிரச்சினைகளும் அடங்கி இருக்கின்றன. இதனை முன்னிறுத்தி அதற்கு தீர்வு காண்பதற்கே நாம்உழைத்துவருகின்றோம். அவற்றைச் செய்வோம். செய்விப்போம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

அந்தவகையில் பெரும்பான்மைக் கட்சி ஒன்றுடன் இணக்கப்பாடு ஒன்றைஏற்படுத்தியே எமது முன்னெடுப்புகளை வெற்றிகொள்ள முடியும். அதானால்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிறுத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ஷவை ஆதரிக்குமாறு மக்களிடம் கோருகின்றோம்.

கோத்தாபயவின் வெற்றியில் பங்கெடுப்பதன் ஊடாக அந்த வெற்றியை மக்களின் வெற்றியாக மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது தான் மக்கள்வெற்றியாளர்களாக மாறுவார்கள். இதுவே எனது எதிர்பார்ப்பாகஇருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!