அமெரிக்காவில் தோழியைக் கொல்ல துப்பாக்கியுடன் வந்த இளைஞர் – திடீரென மனம் மாறிய நெகிழ்ச்சி சம்பவம்!

அமெரிக்காவில் தோழியைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் வந்த மாணவன் மனம் மாறி துப்பாக்கியை ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரேகான் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த இளைஞர் ஒருவரைக் கண்டு கால்பந்தாட்டப் பயிற்சியாளர் அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் துணிவுடன் செயல்பட்டு அவரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்க முயன்று தோல்வியடைந்தார். அப்போது வகுப்பறையில் இருந்து வெளியே வந்த பெண் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்தவரை கட்டியணைத்து கண்ணீர் விட்டார்.

அப்போது கால்பந்தாட்டப் பயிற்சியாளர் அந்த இளைஞரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்தார். இதுகுறித்த விசாரணையின் போது, அந்த இளைஞர் குறிப்பிட்ட பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதும், தனது தோழியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடனும் வந்ததாகக் கூறினார். ஆனால் தனக்கு தோழி கிடைத்து விட்டதால் தவறு செய்ய இருந்ததாக வருந்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!