முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பது குறித்து மலிக் சமரவிக்ரமவுடன் சீனத் தூதுவர் பேச்சு

முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சின் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டையில் சீனா தளம் அமைக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்களால் சீனா எரிச்சலடைந்துள்ளது.

அத்தகைய பரப்புரைகளை முறியடிக்க சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர், அரச மற்றும் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களை அண்மைய நாட்களாக சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!