மூன்று முறை அடித்த ஜாக்போட்…!

அமெரிக்காவில் நபர் ஒருவருக்கும் தொடர்ந்து மூன்றாவது முறையாக லொட்டரியில் மிக பெரிய பரிசு விழுந்துள்ளது.மர்யாலாண்ட் மாகாணத்தை சேர்ந்த பவுல் மெக்டொனால்டு (49) என்பவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் ஜாக்பாட் லொட்டரியில் $194,188 பரிசு விழுந்தது.

இதையடுத்து கடந்தாண்டு ஜனவரி மாதம் அவர் லொட்டரியில் $60,828 பரிசுகளை வென்றார்.

தொடர்ந்து இரண்டு முறை குறைந்த இடைவெளியில் மிக பெரிய பரிசை வென்றதால் அவர் மகிழ்ச்சியில் இருந்தார்.இந்நிலையில் மூன்றாம் முறையாக பவுலுக்கு தற்போது $183,465.90 பரிசு விழுந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அவர் சென்றுள்ளார்.

இதை தொடர்ந்து பரிசு பணத்தை பவுல் இரு தினங்களுக்கு முன்னர் பெற்று கொண்டார்.இந்த பரிசு பணத்தை அவர் எப்படி செலவழித்து வருகிறார் என்பது குறித்த விபரம் இன்னும் வெளியாகவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!