ஆனையிறவு நடவடிக்கையின்போது நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோத்தாபய ராஜபக் ஷ நேரடி விவாதத்தை தவிர்ப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. பயம் என்பது அவரது ஒரு வழமையான விடயமாகும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று டுவிட்டர் பதிவு ஒன்றை இட்டுள்ள மங்கள சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஆனையிறவு நடவடிக்கை – 1 ஐ புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தின் முக்கிய புள்ளியாக பார்த்தார். ஆனால் அந்த ஆனையிறவு நடவடிக்கை – 1 ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தில் கோத்தபாய நாட்டிலிருந்து தப்பிச் சென்றார். எனவே கோத்தா தற்போது நேரடி விவாதத்தை தவிர்ப்பானது ஆச்சரியத்துக்குரியதல்ல. காரணம் பயம் என்பது அவரது ஒரு வழமையான விடயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை முன்னேற்றுவதற்கான கொள்கைகள் குறித்து விவாதிக்க நேரடி விவாதம் ஒன்றுக்கு வருமாறு எதிரணி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார். அதற்கு எதிரணி தரப்பிடமிருந்து இன்னும் பதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!