கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து..6 பேர் பலி…!

கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் பலன்கியூரோ ராணுவத் தளத்தில் இருந்து புறப்பட்ட இரவு விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதுகுறித்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்தனர்.இந்நிலையில் கொலாம்பியா அதிபர் பயணிக்க அவ்வப்போது உபயோகப்படுத்தப்பட்டு வந்த இந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது மாயாமகியுள்ளது.

இதையடுத்துஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்த வேளையில் ,அந்நாட்டின் அல்பன் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் குறித்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!