மாந்தீவில் 3 வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம்!

மட்டக்களப்பு – மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற மூன்று பேருக்கான வாக்குச்சீட்டுக்கள், வரும் 15ம் திகதி இந்து கல்லூரியின் வழங்கல் பிரிவில் இருந்து எடுத்து சென்று வவுணதீவு வாக்கெடுப்பு நிலையத்தில் இருந்து மறுநாள் மாந்தீவுக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

மாந்தீவுக்கு இயந்திரபடகு மூலமாக வாக்கு சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்டு வழமையான நேரத்துக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு முடிவடையும் என தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மாவட்டத்தில் மிகவும் வாக்காளர் குறைந்த வாக்கெடுப்பு நிலையமாக இவ் வாக்களிப்பு நிலையம் இருக்கும் என்றும் அவர் கூறினார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!