இன்னும் இரண்டு நாட்களில் முடிவடையும் பிரசாரம்!

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறவுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

13 ஆம் திகதிக்கு பின்னர் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டால் சட்ட ஆலோசனைக்கு அமைய அதற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

இறுதி பிரசாரக் கூட்டங்கள் தொடர்பாக, எதிர்வரும் வியாழக்கிழமை பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் ஒரு செய்தியை மாத்திரமே உள்ளடக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!