நடிகர் மீது மனைவிக்கிருந்த அதீத அபிமானம் ; மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஸன் மீது தனது புது மனை­விக்கு கடந்த காலத்தில் இருந்த அதீத அபி­மானம் குறித்து அறிந்து பொறாமை கொண்ட கணவன், தனது மனை­வியை கத்­தியால் குத்திக் கொன்று விட்டு தானும் தூக்­கி­ட்டுத் தற்­கொலை செய்து கொண்ட அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் அமெ­ரிக்க நியூயோர்க் நக ரில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறி த்த தக­வல்கள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை வெளியா­கி­யுள்­ளன.

இந்­திய வம்­சா­வ­ளி­யி­னத்தைச் சேர்ந்த தினேஸ்வர் பட்­ஹிதத் (33 வயது) என்ற கண­வரே தனது மனை­வி­யான டோன்னி டொஜோயை (27வயது) குயீன்ஸ் பிராந்­தி­யத்திலுள்ள வீட்டில் வைத்து படு­கொலை செய்த பின் னர் ஹொவார்ட் கடற்­க­ரைக்கு சென்று அங்­குள்ள மர­மொன்றில் தூக்­கிட்டு தற்­கொலை செய்­து­கொண்­டுள்ளார்.

தினேஸ்­வ­ருக்கும் டோன்­னிக்கும் கடந்த ஜூலை மாதம் திரு­ம­ண­மா­னது. இந்­நி­லையில் தினேஸ்வர் இதற்கு முன்­னரும் பல தட­வைகள் மனை­வியை தாக்­கி­யுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தினேஸ்வர் டோன்­னியை கடு­மை­யாக தாக்­கி­ய­தை­ய­டுத்து டோன்னி பொலி­ஸா­ரிடம் அது தொடர்பில் முறைப்­பாடு செய்து தனக்கு தினேஸ்­வ­ரி­ட­மி­ருந்து பாது­காப்பு வழங்கக் கோரி­யி­ருந்தார்.

அவர் தனது மனை­வியை அறைந்து அவ­ரது கழுத்தை நெரிக்க முயன்­ற­தாக அச்­ச­மயம் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

இந்­நி­லையில் தினேஸ்வர் மேற்­படி படு­கொலை இடம்­பெ­று­வ­தற்கு இரு நாட்­க­ளுக்கு முன்னர் (கடந்த புதன்­கி­ழமை) தினேஸ்வர் ஒழுங்­கீன நடத்­தையில் ஈடு­பட்­ட­தாக தன் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டை நீதி­மன்­றத்தில் ஒப்புக் கொண்­டி­ருந்தார். அவ­ருக்­கான தண்­டனை எதிர்­வரும் வருடம் ஜன­வரி மாதம் வழங்­கப்­ப­ட­வி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து டோன்­னிக்கு பாது­காப்பு வழங்க நீதி­மன்றத்தால் உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே அவர் படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

டோன்னி தானும் தினேஸ்­வரும் ஒன்­றாக வாழ்ந்த வீட்டை விட்டு கடந்த ஒக்­டோபர் மாத இறு­தியில் வெளியே­றி­யி­ருந்தார்.

எனினும் தன்­னுடன் இணைந்து வாழ தினேஸ்­வ­ருக்கு மீண்டும் ஒரு சந்­தர்ப்­பத்தை வழங்க விரும்­பிய டோன்னி, கடந்த வெள்ளிக்­கி­ழமை மீண்டும் அந்த வீட்­டிற்கு சென்ற போதே அவர் படு­கொலை­ செய்­யப்­பட்­டுள்­ளதாக டோன்­னியின் சகோ­தரி பன்­னிட்டா பரகத் தெரி­வித்தார்.

தினேஸ்வர் எதற்­காக தனது மனை­வியை படு­கொலை செய் தார் என்­ப­தற்­கான காரணம் எத­னையும் குறிப்­பிட்டு துண்டுக் குறிப்பு எத­னையும் எழு­திவைக்க­வில்லை என்­ற­ போதும் அவர் தனது மனை­விக்கு நடிகர் ஹிருத்திக் ரோஸன் மீதி­ருந்த அதீத அபி­மானம் கார­ண­மாக பொறாமை கொண்­டி­ருந்­ததா­கவும் அதுவே அவர்­க­ளுக்­கி­டையில் முரண்பாடு ஏற்படுவதற்கு காரணமாகவிருந்ததாகவும் அவரது நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் மேற்படி படு கொலை மற்றும் தற்கொலை குறித்து நியூயோர்க் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத் துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!