தமிழர்களுக்காக தியாகம் செய்யத் தயாராம்- கெஞ்சுகிறார் வீரவன்ச!

தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்வதற்குத் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையாக பங்களிப்பு இருக்க வேண்டும். நிறைவேற்ற முடியாத ஐந்து காரணிகளில் தமிழ்-சிங்கள மக்கள் மோதிக்கொள்வதை விடவும் முடியுமான நூறு விடயங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!