சஜித் ஆதரவு கூட்டத்தில் புலிகளின் எழுச்சிப்பாடல்! – இளைஞன் கைது

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடலை ஒலிபரப்பிய குற்றச்சாட்டில், கல்முனை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இறுதி பிரசாரக் கூட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் நேற்று பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளின் படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயக எழுச்சிப் பாடல் திடீரென ஒலிபரப்பப்பட்டது.

இந்த விடயம், கல்முனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த பொலிஸார், ஒலி, ஒழுங்குகளை மேற்கொண்ட இளைஞனை சந்தேகத்தில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!