அவுஸ்திரேலியாவில் கஞ்சா செடியைக் காப்பாற்ற தீ வைத்தவர் கைது!

நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத்தீ பரவிய விவகாரத்தில், கஞ்சா செடிகளைக் காப்பாற்ற தீ வைத்த நபரைக் ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாக ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் பரவிவரும் காட்டுத்தீயினால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. பத்தாயிரம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த விவகாரத்தில், தான் வளர்க்கும் கஞ்சா செடிகளைக் காப்பாற்றத் தீ வைத்ததாக ஒரு நபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நியூசவுத்வேல்ஸ் போலீசார், நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விரைவில் கோடைகாலம் தொடங்கவுள்ள நிலையில், காட்டுத்தீ தொடர்ந்து பரவுவது ஆஸ்திரேலிய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!