ஜனாதிபதி கோத்தாபய முன்னிலையில் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவருக்கான நியமனக் கடிதத்தினையும் வழங்கி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 3.00 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவியேற்பு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!