ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து கரு ஜயசூரிய பதவி விலக வேண்டும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவர் என்ற ரீதியில் சபாநாயகர் உடன் பதவிலியிருந்து நீங்குவதே சிறப்பாக இருக்கும் என்று வீதி, பெருந்தெருக்கள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாட்டு மக்கள் தீர்ப்பொன்றை வழங்கியிருக்கிறார்கள். அந்த முடிவினை பிரதேச சபை தேர்தலின் போதே வழங்கினார்கள். மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் அந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இது வரலாற்று வெற்றியாகும்.

எனவே மக்களால் பெற்றுக் கொண்ட இந்த வரலாற்று வெற்றியின் மூலம் அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்றும் இடமாக பாராளுமன்றம் மாறா வேண்டுமாயின் அவர் பதவி விலகுவதே சிறந்ததாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!