வடக்கு ஆளுநராக நியமிக்க நல்ல தமிழர் கிடைக்கவில்லை!

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு, நல்லதொரு தமிழரை ஜனாதிபதியும்,பிரதமரும் இன்ன்னமும் இனம்காணவில்லை என்றும், அதனாலேயே ஆளுநர் நியமனத்தில் இழுபறி நிலை உள்ளதாகவும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

‘வடக்கு மாகாண ஆளுநர் விடயத்தில் தமிழர் ஒருவரை நியமிக்க முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. வடக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்காக நல்லதொரு தமிழரை இன்னும் ஜனாதிபதியும், பிரதமரும் கண்டுபிடிக்கவில்லை போல அதனால்தான் இழுபறி நிலை காணப்படுகின்றது.

சிலர் இன்னாரை ஆளுநராக நியமியுங்கள் என கூறுகின்றனர்,சிலரை பரிசீலித்து வருகின்றனர். எனினும் இன்றுவரை நல்லதொரு தமிழரை இனம் காணவில்லை போல. அதனால்தான் இன்னும் வடக்குக்கு ஆளுநர் நியமிக்கப்படவில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!