எம்சிசி உடன்பாடு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடவில்லை – டலஸ்

அமெரிக்காவின் எம்சிசி கொடை தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என்று, இணை அமைச்சரவைப் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான கொடை உடன்பாட்டு முன்மொழிவு குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்னர் பொதுமக்களுடன் கலந்துரையாடப்படும்.

முன்னைய அரசாங்கம் இந்த உடன்பாட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர், ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடவில்லை.” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!