பிள்ளையான் விரைவில் விடுதலை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற சிவநேசத்துறை சந்திரகாந்தனை சந்தித்து நலன்விசாரித்த நிலையிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!